News June 25, 2024
திருப்பத்தூருக்கு 1250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் வருகை

திருவாரூரில் இருந்து காட்பாடிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இன்று (ஜூன் 25) ரயிலில் வந்தடைந்தது. காட்பாடியிலிருந்து லாரிகள் மூலம் பாகாயம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 19, 2025
வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கம் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியலை இன்று டிசம்பர் 19 பிற்பகல் 3 மணி அளவில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாண சுப்புலட்சுமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
வேலூர்: மாணவிகளிடம் அத்துமீறிய டிரைவர்!

காட்பாடியை சேர்ந்த 11 வயது சிறுமி வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மாணவி தினமும் பள்ளி பேருந்தில் செல்லும் போது, டிரைவர் தேவேந்திரன் (61) மாணவி மற்றும் அவரின் அருகில் இருக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கில் தேவேந்திரனை வேலூர் மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 19, 2025
வேலூர்: பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை!

வேலூர் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (37), மாணவி பள்ளிக்கு செல்லும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் சத்துவாச்சாரி போலீசில் கடந்த 5ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு தலைமறைவாக இருந்த தட்சிணாமூர்த்தியை நேற்று (டிச.18) கைது செய்தனர்.


