News August 6, 2024

திருப்பத்தூரில் 21 குண்டுகள் முழங்க மரியாதை

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையின் சார்பில் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 44-வது வீரவணக்க நாள் (06.08.2024) கடைபிடிக்கப்பட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நாள் இன்று நடைபெற்றது. இதில் காவல்துறை சார்பில் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News

News December 19, 2025

திருப்பத்தூர்: காவல்துறை எச்சரிக்கை பதிவு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (டிச-19) “மதுபோதையில் வாகனம் இயக்குவது உங்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ” என சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News December 19, 2025

JUST IN: திருப்பத்தூரில் 1,16,739 வாக்காளர்கள் நீக்கம்!

image

வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தம் முடிவடைந்து. அதன்படி இன்று (டிச.19) வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில், 1,16,739 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தற்போது, மொத்தம் 8,82,672 வாக்காளர்கள் உள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளார்.

News December 19, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற (30-12-2025) அன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என நேற்று (டிச-18) ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்தார். (27-12-2025) மற்றும் (28-12-2025) ஆகிய இரு தினங்களில் திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுவதையொட்டி, இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!