News May 7, 2025
திருப்பத்தூரில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபர் கைது

திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆன நிலையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று (ஏப்.30) ராஜதுரையை திருப்பத்தூர் கிராமிய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். *ஏற்கனவே திருமணமாகியும் சிறுமியை திருமணம் செய்தது குறித்து உங்கள் கருத்து என்ன?
Similar News
News November 4, 2025
திருப்பத்தூர்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடூரம்!

ஜோலார்பேட்டை அடுத்த கலர் வட்டம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை, (நவ.2) அன்று பொன்னேரி பஸ் நிறுத்தத்தில் வைத்து ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வல்லரசு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வல்லரசை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த நபரை நேற்று (நவ.3) போலீசார் சிறையில் அடைந்தனர்.
News November 4, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
ஜோலார்பேட்டை: கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் இன்று (நவ.3) ஜோலார்பேட்டை அருகே ஜே.என்.ஆர் நகர் நாகாலம்மன் கோயில் அருகே சுமார் 1 கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது, ஜோலார்பேட்டை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


