News March 24, 2025

திருப்பத்தூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா குகை

image

ஆம்பூருக்கு அருகே உள்ள மலையாம்பட்டு கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆர்மா மலைக்குகை அமைந்துள்ளது. சமணர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த குகையில், பல்லவர் கால ஓவியங்கள் காணப்படுகின்றன. மூலிகைச் சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்களில் சமணக் கதைகள் மற்றும் எண்திசைக் காவலர்கள் உருவங்கள் உள்ளன. 1882ஆம் ஆண்டு, ஆங்கிலேய அறிஞர் ராபர்ட் சீவெல் இதை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 5, 2025

பாச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

image

குடியாத்தம் அடுத்த சந்தன பேட்டை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35) இவர் இன்று (டிச.4) பாச்சல் அருகே ஆசிரியர் நகரில் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News December 5, 2025

திருப்பத்தூர்: விளையாட்டு வாக்கில் தின்னரை குடித்த குழந்தை!

image

ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்பியம்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் அபினாஷ் இவரது மகன் பிரனாப் (வயது 2 1/2) வயது குழந்தை நேற்று (டிச.4) தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் இருந்த பெயிண்ட் அடிக்க வைத்து இருந்த தின்னர் குடித்து மயங்கி விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த பெற்றோர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

News December 5, 2025

திருப்பத்தூர்:இரவு ரோந்து பணி விபரம்

image

இன்று (டிச.04) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது ரோந்து பணி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது பொது மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக கீழே உள்ள எண்ணிற்கு அழைக்கலாம்.

error: Content is protected !!