News December 6, 2024
திருப்பத்தூரில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் சி.கே.சி தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு ரூபாய் 7 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் வழங்கினார்கள். உடன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
Similar News
News August 11, 2025
திருப்பத்தூர்: முன் மாதிரியான சேவை விருது அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் குழந்தைகள் இல்லங்களுக்கு முன் மாதிரியான சேவை விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருதுக்கான விண்ணப்பங்கள் 12.08.2025-க்குள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
News August 11, 2025
திருப்பத்தூர்: BILL போடும் போது நம்பர் தரீங்களா? கவனத்திற்கு!

ஷாப்பிங் மால், திரையரங்கம், சூப்பர் மார்க்கெட்டில் பில் போடும்போது செல்போன் நம்பரை கேட்பது வழக்கம். நாமும் யோசிக்காமல் நம்பரை தருகிறோம். இதனால் தேவையில்லாத போன் கால், SPAM கால் வர வாய்ப்புள்ளது. Ministry of Consumer Affairs-2023 படி கட்டாயப்படுத்தி நம்பர் வாங்குவது குற்றம். மீறினால் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரைக்காலம். எனவே நம்பர் தரவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஷேர் பண்ணுங்க.
News August 11, 2025
திருப்பத்தூர்: பரோடா வங்கியில் வேலை; பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க <