News April 25, 2025
திருப்பத்தூரில் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து மகளிர் காவல் நிலையம் திருப்பத்தூர் – 04179 221320, ஆம்பூர் – 04174 246204, வாணியம்பாடி – 04179 235100. இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ண சொல்லுங்கள்.
Similar News
News December 30, 2025
திருப்பத்தூரில் பயங்கர தீ விபத்து!

திருப்பத்தூர் நகராட்சி ஆசிரியர் நகர் பகுதியை அடுத்த அண்ணான்டப்பட்டியில் மனோன்மணி என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று (டிச.29) திடீரென மின்கசிவு காரணமாக குடிசை தீ பற்றி எரிந்தது. புகையைக் கண்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 30, 2025
திருப்பத்தூர்: மகளுக்கு விஷம் கொடுத்த கொடூர தந்தை!

காந்திநகரை சேர்ந்த நகை தொழிலாளி மணிகண்டன் (50) மகள் கெஜலட்சுமி (23). இவர் கோவை தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இவர் ஆதியூரை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்தார். மகளின் காதல் பிடிக்காததால், மணிகண்டன், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த மகளுக்கு நேற்று முன்தினம் மாதுளம் பழத்தில் விஷம் கலந்து கொடுத்து தானும் அதே பழத்தை சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News December 30, 2025
திருப்பத்தூர்: தம்பி மனைவியிடம் ஆபாசப் பேச்சு!

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வெங்கட் சமுத்திரம் ஊராட்சி கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரின் மனைவி மாலதி(40). கூலித் தொழிலாளியான இவரிடம் இவரது கணவனின் அண்ணன் குமார்(55) தினசரி ஆபாசமாக பேசுவது, சண்டை போடுவது என இருந்து வந்துள்ளார். இதுகுறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் மாலதி புகாரின் பேரில் குமாரை நேற்று கைது செய்தனர்.


