News August 15, 2024

திருப்பத்தூரில் பலத்த பாதுகாப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறும் நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையில் ஏராளமான போலீசார், விழா நடைபெறும் விளையாட்டுத் திடலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News November 22, 2025

திருப்பத்தூர்: நாக்கை தானே அறுத்துக்கொண்ட நபர்!

image

திருப்பத்தூர்: ஆம்பூர், வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மருது பாண்டியன் வயது (32). கூலி தொழிலாளியான இவர் நேற்று (நவ.22) இரவு 10.30 மணியளவில், ஆம்பூர் உமர் ரோட்டில் உள்ள கோழி கடையின் அருகே, தனது நாக்கை தானே அறுத்துக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர், வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News November 22, 2025

திருப்பத்தூர்: 500 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டெடுப்பு!

image

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பேராசிரியர் க.மோகன்காந்தி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கற்கள், 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்களை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், போரில் மரணமடைந்த வீரனின் மனைவி, கணவனோடு உடன்கட்டை ஏறியது போல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றைத் தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

News November 22, 2025

திருப்பத்தூர்: காவலர் ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டம், நேற்று (நவ.21) இரவு – இன்று (நவ.22) காலை ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே அட்டவணைகள் உள்ளது. ரோந்து பணி 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது. பொது மக்களுக்கு இந்நேரத்தில் புகார் இருந்தால் உடனடியாக புகாரை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!