News March 20, 2024
திருப்பத்தூரில் பயணிகள் அவதி

கௌகாத்தி ரயில் நிலையத்தில் பெங்களூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் வந்து நின்றது. அப்போது இன்ஜினில் இருந்து 11-ஆவது பெட்டி சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் கிரீஸ் இல்லாததால் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனால் அந்த பெட்டியை கழட்டி விட்டுவிட்டு ரயில் பெங்களூர் நோக்கி சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர் .
Similar News
News April 19, 2025
ஆங்கிலேயர்களுக்கு தண்ணீர் தர மறுத்த திருப்பத்தூர் மக்கள்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1772ல் முதல் மாவட்டம் சேலம் உருவாக்கப்பட்டு அதற்கு மூன்று கலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் ஒன்று திருப்பத்தூர் கலெக்டர். இந்தப் பகுதியில் கலெக்டரை நியமித்ததும் அங்கு வந்து செல்லும் ஆங்கிலேயர் தண்ணீருக்காக பொது கிணற்றை நாடி உள்ளனர். ஆனால் தாய் மண்ணின் மீது கொண்ட பாசத்தாலும் ஆங்கிலேயர் மீது இருந்த வெறுப்பாலும் தண்ணீர், உணவு தர திருப்பத்தூர் மக்கள் மறுத்துவிட்டனர். ஷேர்
News April 18, 2025
திருப்பத்தூர்: வியாபாரத்தில் நஷ்டமா . ..? சரி செய்ய இங்கு போங்க

திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயத்தின் சிறப்பு. இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினார் அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக்காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார், அவருக்கு இறைவன் காட்சி தந்து கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். இந்த தளத்தில் நியமத்தோடு வேண்டினால் வியாபாரக்கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை.
News April 18, 2025
இலவச கோடைக்கால பயிற்சி முகாம் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது. தடகளம், கபடி, கூடைப்பந்து, கால்பந்து மற்றும் கை பந்து என 5 விளையாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7401703463 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க