News March 20, 2024

திருப்பத்தூரில் பயணிகள் அவதி

image

கௌகாத்தி ரயில் நிலையத்தில் பெங்களூர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று ஜோலார்பேட்டை ரயில் நிலைய நடைமேடை 1-ல் வந்து நின்றது. அப்போது இன்ஜினில் இருந்து 11-ஆவது பெட்டி சக்கரத்தின் அருகே உள்ள ஸ்பிரிங்கில் கிரீஸ் இல்லாததால் அதிக வெப்பமாகி உடைந்தது. இதனால் அந்த பெட்டியை கழட்டி விட்டுவிட்டு ரயில் பெங்களூர் நோக்கி சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர் .

Similar News

News December 13, 2025

திருப்பத்தூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.இதை SHARE பண்ணுங்க

News December 13, 2025

திருப்பத்தூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <>க்ளிக் செய்யுங்கள்<<>>. அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

திருப்பத்தூர் மாணவர்கள் கவனத்திற்கு!

image

திருப்பத்தூரில் அரசு/ அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை தேர்வு 2025-26 (NMMS) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இத்தேர்வு வரும் ஜனவரி 10 தேதி நடைபெற உள்ளது. மேலும், தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை, வருடம் 12 ஆயிரம் ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!