News January 2, 2025
திருப்பத்தூரில் நேற்று ஒரே நாளில் 3 விபத்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் தடுப்பு சுவர் மீது மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்தது. ஆம்பூர் அருகே மாராப்பட்டு பகுதியில் சுற்றுலா சென்ற வேன் கவிழ்ந்து விபத்து மற்றும் நாட்டறம்பள்ளி என 3 வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் ஒருவர் உயிரிழந்தார். புத்தாண்டு தினத்தில் விபத்து ஏற்பட்டது குறித்து மக்கள் வேதனை தெரிவித்தனர்.
Similar News
News March 1, 2026
திருப்பத்தூர்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
திருப்பத்தூர்: 10 அடி பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட உயிர்!

திருப்பத்தூர் நகராட்சி ஆதிசக்தி நகர் பகுதியில், நேற்று இரவு மஹாவிஷ்ணு என்பவருக்குச் சொந்தமான பசுமாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பசுமாட்டினை காயமின்றி பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் இந்த துரித நடவடிக்கையைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
News March 1, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி.28 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


