News January 2, 2025
திருப்பத்தூரில் நாளை முதல் பொங்கல் பரிசுக்கு டோக்கன்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (02.01.2025) நடைப்பெற்றது. இதில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான கூப்பன் நாளை முதல் (03.01.2025) விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் இணை இயக்குநர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News December 24, 2025
திருப்பத்தூர்: தும்மியதால் சிறுவன் பரிதாப பலி!

நாட்றம்பள்ளி அடுத்த மயிலாரம்பட்டி பகுதியில் சிலம்பரசன் என்பவர், நேற்று(டிச.23) இருசக்கர வாகனத்தில் தனது குடுத்தினருடன், சென்றுக்கொண்டிருந்த போது, எதிர்பாராவிதமாக, சிலம்பரசனுக்கு தும்மல் வந்த நிலையில், நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், சாலையோர மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சிலம்பரசனின் மகன் அஸ்வினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.
News December 23, 2025
இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (23-12-2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களின் பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் அசம்பாவிதம் குறித்து கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது.
News December 23, 2025
திருப்பத்தூர்: 12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் 311 காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, LLB, MBA, M.A Degree, Degree with Diploma in P.R / Mass Communication / Advertising / Journalism / Labour Laws, M.Sc psychology முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர் இங்கு <
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT


