News August 4, 2024

திருப்பத்தூரில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News December 23, 2025

திருப்பத்தூர்: 5-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

image

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று (டிச.23) தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை கைவிடவும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து 5-வது நாளாக போராட்டம் நடைபெறுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News December 23, 2025

திருப்பத்தூர் காவல்துறை அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் புகைப்படத்துடன் கூடிய எச்சரிக்கை செய்தி சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது வருகிறது. இதில் இன்று (டிச-23) வெளியிட்டுள்ள செய்தியில் “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம்” என எச்சரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக வாகனம் ஒட்டும்படி அறிவுறுத்தப்படுகிறது.

News December 23, 2025

திருப்பத்தூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!