News August 4, 2024

திருப்பத்தூரில் காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

வேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களளில் பணிபுரியும் 45 காவல் ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை வேலூர் சரக டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும், அந்ததந்த மாவட்ட எஸ்பி-க்கள் மாற்றம் பெற்றவர்களுக்கு ஆணையை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News October 21, 2025

திருப்பத்தூர்: 10th பாஸ் போதும்… கைநிறைய சம்பளம்

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு <>இந்த இணையதளத்தில் <<>> வரும் நவ.04க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 21, 2025

திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து சிறுமி காயம்

image

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் யாமினி (17). இவர் இன்று எதிர்பாரா விதமாக கீழே கிடந்த பாம்பின் மீது மிதித்ததில், அந்த பாம்பு அவரது காலில் கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், கடித்த பாம்பினை பையில் போட்டுகொண்டு, சிறுமியையும் அழைத்து கொண்டு ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு அந்த பாம்பை மருத்துவர்களிடம் காண்பித்து சிறுமிக்கு சிகிச்சை வழங்கினர்.

News October 20, 2025

திருப்பத்தூர் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும், ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!