News August 3, 2024
திருப்பத்தூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை முருகர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பக்தர்கள் வசதிக்கேற்ப திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Similar News
News January 1, 2026
திருப்பத்தூரில் கரண்ட் கட் – உங்க பகுதி இருக்கா?

திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர்நாடு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஜன.3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர், மடவாளம், மாடப்பள்ளி, தாதனவலசை, கந்திலி, பாச்சல், ஜலகாம்பாறை, புதூர்நாடு, ஜெயபுரம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், அன்னசாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 1, 2026
திருப்பத்தூர்: பட்டப்பகலில் துணிகர சம்பவம்!

நாட்றம்பள்ளி அடுத்த அதிபெரமனூரை சேர்ந்தவர் மாணிக்கம் (61) இவர் வீட்டில் நேற்று (டிச.31) வாணியம்பாடி அருகே தும்பேரியை சேர்ந்த மீனா, பட்டப்பகலில் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை & ரொக்க பணத்தை திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் மூதாட்டியை கைது செய்தனர்.
News January 1, 2026
நாட்டறம்பள்ளி அருகே தங்க நகை திருட முயன்ற மூதாட்டி கைது

நாட்டறம்பள்ளி அடுத்த அதிபெரமனூர் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 61) இவர் வீட்டில் இன்று (டிச.31)வாணியம்பாடி அருகே தும்பேரி சேர்ந்த மீனா என்பவர் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை மற்றும் ரொக்க பணம் திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலிசார் மூதாட்டியை கைது செய்தனர்.


