News August 3, 2024
திருப்பத்தூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை முருகர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பக்தர்கள் வசதிக்கேற்ப திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Similar News
News August 13, 2025
பொது இடத்தில் பிறந்த நாள் விழா – வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி இவரது மகன் நவீன் குமார் என்பவர் கடந்த 10 ம் தேதி அதே பகுதியில் பொது இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பிறந்த நாள் விழா முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். இது குறித்து தீர்த்தகிரி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து நவீன்குமார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News August 12, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று(ஆக.10) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
News August 12, 2025
மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு பதிவு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க போக்குவரத்து துறையின் விழிப்புணர்வு பதிவு கார் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் போது தலை மற்றும் கையை வெளியில் நீட்ட வேண்டாம். முக்கியமாக குழந்தைகளை அழைத்து செல்லும் போது மிக கவனமாக அழைத்துச் செல்லவும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்புடன் கவனத்துடனும் பார்த்துக்கொள்ள வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.