News March 18, 2024

திருநெல்வேலியில் நாங்குநேரி எம்எல்ஏ போட்டியா?

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக இன்று (மார்ச் 18) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளருமான ரூபி மனோகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Similar News

News December 6, 2025

நெல்லையில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply!

image

நெல்லை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

News December 6, 2025

நெல்லை: டிகிரி போதும்., ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

நெல்லை மக்களே, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள 64 Junior Manager பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 40 வயகுட்பட்ட டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech படித்தவர்கள் டிச 17க்குள் <>இங்கு க்ளிக்<<>>செய்து விண்ணபிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்யுங்க.

News December 6, 2025

நெல்லை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

image

சீவலப்பேரி பொட்டல் பச்சேரி பகுதியை சேர்ந்த அந்தோனி மகன் மிக்கேல் (47). விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்ட உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!