News August 16, 2024
திருத்தணி: ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன் பாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் விதிகளை மீறி இயக்கப்பட்ட வெளி மாநில மற்றும் உள் மாநில வாகனங்கள் மீது 1221 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ன. மேலும் விதிகளை மீறிய 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.68 லட்சம் அபராதம் வசூலித்து 116 சதவீதம் இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.
Similar News
News January 2, 2026
திருவள்ளூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்க்கலாம். பெயர் இடம்பெறாதவர்கள் அல்லது தவறுகள் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்ய உதவும் என ஆவடி மாநகராட்சி அறிவித்துள்ளது.
News January 2, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

கும்மிடிப்பூண்டி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் நிக்சன்(48). கார் டிரைவரான இவருக்கு கிருஷ்ண மாலா(39) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் இருந்தனர். கடந்த 2023ஆம் தேனி மாவட்டம், கம்பம் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவரது மகள் பேமினா(14) சுருளி அருவியில் விழுந்து உயிரிழந்தார். இதனால், மனமுடைந்த நிக்சன், நேற்று(ஜன.1) தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
News January 2, 2026
ஆவடி புதிய காவல் ஆணையாளர் பதவியேற்பு!

ஆவடி காவல் ஆணையாளராக காவல்துறை கூடுதல் இயக்குனர்
பிரேம் ஆனந்த் சின்கா பொறுப்பேற்று, தமிழ்நாடு காவல்துறையின் தென் மண்டல காவல் துறை தலைவராக பணிபுரிந்து வந்த பிரேம் ஆனந்த் சின்கா, காவல்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஆவடி காவல் ஆணையரகத்தின் நான்காவது புதிய காவல் ஆணையாளராக நேற்று(ஜன.1) பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.


