News January 1, 2025

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் ‘லிப்ட்’ வசதி

image

திருச்செந்தூர் ரயில்நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் முதல் நடைமேடையிலிருந்து 2-வது நடைமேடைக்கு செல்வதற்கு ‘லிப்ட் வசதி’ செய்யப்பட்டுள்ளது. இந்த லிப்ட் வசதி கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 7, 2026

தூத்துக்குடி: பள்ளி மாணவன் பரிதாபமாக பலி

image

தூத்துக்குடி டவுண் தனியார் பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு நேற்றிரவு திரும்பிக் கொண்டிருந்தபோது வள்ளியூர் நான்கு வழிச்சாலையில் பேருந்தின் பின் கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. படிக்கட்டு வழியாக 9ம் வகுப்பு மாணவன் நவீன் குமார் என்பவர் கீழே விழுந்ததில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வள்ளியூர் போலீஸ் விசாரணை.

News February 7, 2026

தூத்துக்குடி துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு தொடக்கம்

image

தூத்துக்குடி துறைமுகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுமதி இல்லா ட்ரான்களை கண்டறிந்து அதனை செயலிழக்க செய்யும் வகையில் இந்த அமைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறை என்பதால் இந்த பெருமை தூத்துக்குடியைச் சாரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2026

தூத்துக்குடி பெண் கொலை; 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது

image

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பையூரணி பகுதியில் கடந்த 2018 ஆண்டு 48 வயது பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த டேவிட், ராஜ் இருவரையும் கோவில்பட்டி காவல் கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!