News April 11, 2025

திருச்செந்தூர் மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

image

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் குழந்தை இறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று அமைச்சர் ம.சுப்பிரமணியம் திடீர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.

Similar News

News November 16, 2025

தூத்துக்குடி: 1,429 காலியிடங்கள்.. உடனே APPLY

image

தூத்துக்குடி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1,429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 16, 2025

தூத்துக்குடி விவசாயிகள் கவனத்திற்கு

image

விளாத்திகுளம் பகுதியில் இந்தாண்டு சுமார் 12,000 ஹெக்டர் வரை மக்காச்சோளம் பயிரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பயிர் பாதுகாப்பு வழிமுறைகளை வட்டார வேளாண் உதவி இயக்குநர் கூறியுள்ளார். அதில், அமெரிக்கன் படைப்புழு நெல், மக்காச்சோளம் உட்பட 80 வகையான பயிர்களை தாக்கும. மகசூல் இழப்பை உருவாக்கும். இதனை முறையான பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளால் கட்டுப்படுத்திட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

News November 15, 2025

BREAKING தூத்துக்குடியில் மிக கனமழை; ஆட்சியருக்கு அறிவுறுத்தல்

image

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க ஆட்சியர்களுக்கு மேலாண்மைத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!