News April 25, 2025
திருச்செந்தூர் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூர், நடுநாலுமூலை கிணறு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வம் (25). கடந்த 2019-ம் ஆண்டு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த வழக்கு விசாரணை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.நீதிபதி சுரேஷ், அருள்செல்வத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
Similar News
News April 25, 2025
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் மானியம் பெற்று இயங்கி வரும் 8 இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் என 6 – 8 வயது வரை உள்ள குழந்தைகள், 12ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இதுபோன்று, இல்லத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் மாவட்ட குழந்தை நலக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதை *SHARE* பண்ணுங்க
News April 25, 2025
நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி 18 பேர் படுகாயம்

மதுரையைச் சேர்ந்த அழகர்சாமி, இன்று தனது குடும்பத்தினருடன், வேனில், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு, மதுரை திரும்பி கொண்டு இருந்தார். மதுரை பைபாஸ் சாலையில், இவர்கள் சென்ற வேன் திடீரென்று நிலைத்தடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் 4 குழந்தைகள் 8 பெண்கள் உட்பட 18 பேர் காயம் அடைந்தனர். சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 25, 2025
தூத்துக்குடி: விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி

புதுக்கோட்டை அருகே உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் கடத்தப்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தத்துரூப ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர்.