News August 4, 2024
திருச்செந்தூர் கோவிலில் துலாபாரம் செய்த அன்புமணி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி இன்று அதிகாலை எடைக்கு எடை துலாபாரமாக கோவிலுக்கு அரிசி தானமாக வழங்கினர். மேலும் முன்னதாக கடற்கரையில் புனித நீராடினர். தொடர்ந்து அவருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Similar News
News December 16, 2025
தூத்துக்குடி: திமுக பிரமுகர் கொலை.. 2 பேருக்கு ஆயுள்

தூத்துக்குடி டேவிஸ்புரத்தை சேர்ந்தவர் மாரி செல்வம். 2015-ல் இவரது வீட்டில் நகை திருட்டில் சிலுவைப்பட்டி திமுக பிரமுகர் ஜேசுராஜ் மகன் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ஜேசுராஜிடம் மாரி செல்வமும், அருண் சிங் என்பவரும் கேட்டபொழுது ஏற்பட்ட தகராறில் இருவரும் ஜேசுராஜை வெட்டி கொலை செய்தனர். இது கொலை வழக்கில் மாரி செல்வம் , அருண் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
News December 16, 2025
தூத்துக்குடி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

தூத்துக்குடியில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மடத்தூர், சிப்காட், ஆசிரியர் காலனி, 3வது மைல் பகுதிகள், மில்லர்புரம், சங்கர்காலனி பகுதிகள், சோரீஸ்புரம் பகுதிகள், என்.ஜி.ஓ.காலனி, பர்மா காலனி, டி.எம்.பி. காலனி, அண்ணாநகர், கலெக்டர் ஆபிஸ் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்ட்டுள்ளது. முழு விவரம் அறிய <
News December 16, 2025
தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


