News August 3, 2024

திருச்செந்தூர் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை

image

திருச்செந்தூரின் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். ஆடிப் பெருக்கை ஒட்டி இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சென்று முருகனை வழிபட்டனர்.

Similar News

News December 5, 2025

தூத்துக்குடி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 5, 2025

தூத்துக்குடி: கொலை குற்றவாளி சமூக சேவை செய்ய உத்தரவு

image

குளத்தூர் அருகே உள்ள வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் கடந்த 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் இளம் சிறார் ஒருவருக்கு 17 ஆண்டுகளுக்குப் பின், நேற்று தூத்துக்குடி இளம் சிறார் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சமூக சேவை செய்ய உத்தரவிட்டது.

News December 5, 2025

தூத்துக்குடி: கம்பால் அடித்து கொலை.. 2 பேருக்கு ஆயுள்

image

ஆறுமுகநேரி அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்தவர் அந்தோணிசூசை ராஜ். இவரை கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிலிவிங்ஸ்டன், அன்றோ ஆகியோர் முன் விரோதம் காரணமாக கம்பில் அடித்து கொலை செய்தனர். இது பற்றி திருச்செந்தூர் போலீசார் இருவர் மீதும் தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அன்றோ, அந்தோணி லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!