News August 3, 2024
திருச்செந்தூர் கோவிலில் ஆடி சிறப்பு பூஜை

திருச்செந்தூரின் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமானவர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர். ஆடிப் பெருக்கை ஒட்டி இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சென்று முருகனை வழிபட்டனர்.
Similar News
News November 17, 2025
தூத்துக்குடி வி.ஓ.சி துறைமுகத்தின் புதிய மைல்கல்

தூத்துக்குடி VOC துறைமுகம் அக்டோபர் 2025ல் 39,41,283 டன் சரக்குகளை நிர்வகித்து சிறப்பான சாதனைப் படைத்துள்ளது. இது 2024 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 35,52,567 டன்னுடன் ஒப்பிடும்போது 10.94% உயர்வைக் காட்டுகிறது. செயல்திறன் மற்றும் கடல்சார் சேவை தரத்தை மேம்படுத்தும் துறைமுகத்தின் தொடர்ந்த முயற்சியின் பலனாக இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
News November 17, 2025
3.8 கிலோ கஞ்சா பதுக்கிய மூன்று பேர் கைது

தூத்துக்குடி மடத்தூர் சோரீஸ்புரத்தில் உள்ள லாரி செட் ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3. 8 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் தெரு அரிகிருஷ்ணன், ரவிக்குமார், சந்திரசேகர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
News November 16, 2025
மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த தொழிலாளி பலி

தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் கனகலிங்கம்(40). கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் மின் சுவிட்சை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


