News March 25, 2025
திருச்செந்தூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளரின் நற்செயல்

சாத்தான்குளம், அரசூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் இருதய ஆபரேஷனுக்கு பணம் தேவைப்பட்டதால் அவரது நிலத்தை விற்க முயன்றுள்ளார். அப்போது வரைமுறை பட்டாவாக மாற்ற வேண்டி இருந்ததால் காலதாமதமானது. இதனால் திருச்செந்தூர் ஆர்டிஓ-வின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் ஆபரேஷன் செலவுக்கு தனது 10 பவுன் நகையை தருவதாக தெரிவித்துள்ளார். இதை, பாராட்டி சாத்தை விவசாய சங்க தலைவர் லூர்து மணி புத்தகம் வழங்கி கௌரவித்தார்
Similar News
News November 28, 2025
தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு

மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற வகையில் தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ. 28) மாணவர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
தூத்துக்குடி: ரூ.10.60 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியை சேர்ந்த ரகுபதிராஜா தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இவரது மனைவி திடீரென்று நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற போது சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்தது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடைபெற்றதில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரகுபதி ராஜாவுக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது
News November 28, 2025
தூத்துக்குடி: ரூ.10.60 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியை சேர்ந்த ரகுபதிராஜா தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இவரது மனைவி திடீரென்று நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற போது சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்தது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடைபெற்றதில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரகுபதி ராஜாவுக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது


