News March 25, 2025
திருச்செந்தூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளரின் நற்செயல்

சாத்தான்குளம், அரசூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் இருதய ஆபரேஷனுக்கு பணம் தேவைப்பட்டதால் அவரது நிலத்தை விற்க முயன்றுள்ளார். அப்போது வரைமுறை பட்டாவாக மாற்ற வேண்டி இருந்ததால் காலதாமதமானது. இதனால் திருச்செந்தூர் ஆர்டிஓ-வின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் ஆபரேஷன் செலவுக்கு தனது 10 பவுன் நகையை தருவதாக தெரிவித்துள்ளார். இதை, பாராட்டி சாத்தை விவசாய சங்க தலைவர் லூர்து மணி புத்தகம் வழங்கி கௌரவித்தார்
Similar News
News October 25, 2025
JUST IN தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருகை தருகிறார். கோவில்பட்டிக்கு வருகை தரும் முதல்வர் அங்கு கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம், அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலை ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் செய்து வருகிறார்.
News October 25, 2025
28 ல் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தோர் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
News October 25, 2025
தூத்துக்குடி: ரயில்வே துறையில் சூப்பர் வேலை

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.நேரடி நேர்காணல் மூலம் தேர்வு.
5.மேலும் விபரங்களுக்கு இங்கு <
சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!


