News March 25, 2025

திருச்செந்தூர் ஆர்டிஓ நேர்முக உதவியாளரின் நற்செயல்

image

சாத்தான்குளம், அரசூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் இருதய ஆபரேஷனுக்கு பணம் தேவைப்பட்டதால் அவரது நிலத்தை விற்க முயன்றுள்ளார். அப்போது வரைமுறை பட்டாவாக மாற்ற வேண்டி இருந்ததால் காலதாமதமானது. இதனால் திருச்செந்தூர் ஆர்டிஓ-வின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன் ஆபரேஷன் செலவுக்கு தனது 10 பவுன் நகையை தருவதாக தெரிவித்துள்ளார். இதை, பாராட்டி சாத்தை விவசாய சங்க தலைவர் லூர்து மணி புத்தகம் வழங்கி கௌரவித்தார்

Similar News

News September 18, 2025

தூத்துக்குடி: கல்குவாரியில் மூழ்கி தொழிலாளி பலி

image

தூத்துக்குடி மாவட்டம் அகிலாண்டபுரத்தை சேர்ந்த குருசாமி (35), அருகிலுள்ள கல்குவாரியில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் அவரை காணவில்லை என்பதால் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் கழுகுமலை தீயணைப்பு படையினர் தண்ணீரில் மூழ்கி குருசாமியை தேடும் பணியில் ஈடுப்பட்டனர். நேற்று மாலை 5 மணியளவில் குருசாமி உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News September 18, 2025

தூத்துக்குடி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடிமாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, வேப்பலோடை, திருச்செந்தூர், நாகலாபுரம், ஏரல் அரசு ஐடிஐ-கள் மற்றும் தனியார் ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டில் நேரடி மாணவர் சேர்க்கையில் சேர கால அவகாசம் செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள் இதில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் வர மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். SHARE பண்ணுங்க.

News September 18, 2025

சாத்தான்குளம் அருகே வாலிபர் தற்கொலை

image

சாத்தான்குளம் அருகே உள்ள பழங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்வா லாரன்ஸ் (19) என்ற வாலிபர் கடந்த சில தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மெய்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!