News November 25, 2024
திருச்செந்தூரில் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் சரக உட்கோட்டத்தின் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வசந்தகுமார் நிர்வாக காரணங்களுக்காக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து புதிய துணை கண்காணிப்பாளராக மகேஷ்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது சக போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Similar News
News November 23, 2025
திருச்செந்தூர்: ஐயப்ப பக்தர்களுக்கு.. போலீஸ் அறிவிப்பு!

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலை ஓரங்களில் அங்கும் இங்கும் நிறுத்தாமல், போக்குவரத்துக்கும், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தொடர் மழை காரணாமாக தற்காலிக நிறுத்துமிடங்கள் (Parking) பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
News November 22, 2025
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 22, 2025
BREAKING: தூத்துக்குடியில் கனமழை – கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்றுதிருவைகுண்டம் அணைக்கட்டினை பார்வையிட்டு அலுவலர்களை தொடர்ந்து அணையின் நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கட்டு அதன் சுற்றியுள்ள குளம் மற்றும் ஏரிகளை ஆய்வு செய்தார்.


