News September 14, 2024

திருச்சுழியில் 11 பேர் மீது வழக்கு பதிவு

image

திருச்சுழி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன்(80). இவருக்கும் இவரது மகன் கணேசனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது திருச்சுழி போலீசார் நேற்று செப்டம்பர் 13 வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News December 3, 2025

ராஜபாளையம்: காவலர்கள் கொலையில் பாய்ந்த குண்டாஸ்

image

ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில் கடந்த நவ.11 அன்று இரு கோவில் பாதுகாவலர்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கைதாகியுள்ள நாகராஜ் மற்றும் முனியசாமி ஆகியோர் மீது காவல் கண்காணிப்பாளர் கண்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

News December 3, 2025

விருதுநகரில் 9 புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

image

விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் உத்தரவிட்டுள்ளார். தரம் உயர்த்தப்பட்ட பந்தல்குடி காவல் நிலையத்தில் முதல் இன்ஸ்பெக்டராக கிருஷ்ணவேணி பொறுப்பேற்றார். இதேபோல் மம்சாபுரம், ஆலங்குளம், கீழராஜகுலராமன், சிவகாசி நகர், எம்.புதுப்பட்டி, சாத்தூர் தாலுகா, வீரசோழன், ஏழாயிரம்பண்ணை ஆகிய காவல் நிலையங்களுக்கும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News December 3, 2025

அருப்புக்கோட்டை: GH கட்டிடம் விரைவில் திறப்பு

image

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ரூ.34 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கட்டிடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!