News September 14, 2024
திருச்சுழியில் 11 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சுழி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன்(80). இவருக்கும் இவரது மகன் கணேசனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது திருச்சுழி போலீசார் நேற்று செப்டம்பர் 13 வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
சிவகாசி: கண்மாயில் கிடந்த சடலம்

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் சிலோன் காலனி கண்மாய் பகுதியில் முதியவர் சடலம் ஒன்று கிடப்பதாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாரனேரி போலீசார் முதியவர் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவர் மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ராமர் (78)என்பது தெரியவந்தது. கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 5, 2025
அருப்புக்கோட்டை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு

விளாத்திகுளம் அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் நேற்று தனது மனைவி சுலோச்சனா(65) உடன் காரியாபட்டி அருகே கணக்கநேந்தல் சென்று விட்டு பைக்கில் அருப்புக்கோட்டை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது ராமசாமிபுரம் பகுதியில் பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்ற நிலையில் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
விருதுநகர்: டிகிரி முடித்தவர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


