News September 14, 2024
திருச்சுழியில் 11 பேர் மீது வழக்கு பதிவு

திருச்சுழி அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன்(80). இவருக்கும் இவரது மகன் கணேசனுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது திருச்சுழி போலீசார் நேற்று செப்டம்பர் 13 வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
சிவகாசி: பட்டாசு ஆலைகளில் நாளை முதல் ஆய்வு

சிவகாசி பகுதியில் 300 பட்டாசுஆலைகள் என விருதுநகர் மாவட்டத்தில் 842 பட்டாசு ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் பட்டாசு தொழிலை ஒழுங்குபடுத்த பட்டாசு கழகம் அமைக்க தாக்கலான வழக்கில் சிவகாசி பகுதியில் சிறு, நடுத்தர, பெரிய பட்டாசு ஆலைகளில் நவ.28,29 அன்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து நாளை சிவகாசி பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகள் ஆய்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 27, 2025
விருதுநகர்: உங்க அனைத்து பிரச்னைகளும் தீர இத பண்ணுங்க

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
3. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 27, 2025
விருதுநகர் அருகே விவசாயி மர்மமான முறையில் மரணம்

ஏழாயிரம்பண்ணை அருகே கரிசல்பட்டியை சேர்ந்த விவசாயி ரகுநாதன் 55. இவர் கடந்த 25ம் தேதி தனது தோட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் நேற்று உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது ரகுநாதன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது செல்லும் வழியில் பலியானார். விவசாயியின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


