News March 25, 2025
திருச்சி:3,75,000மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று முதலியார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் 4 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3,75,000 மதிப்புள்ள 12,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
திருச்சியில் 15 % பேருக்கு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில், திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 15 % பேர் இதுவரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1609 பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 1175 பேர் பயிற்சியை முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 186 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக திறன் மேம்பாட்டு கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
திருச்சியில் 15 % பேருக்கு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில், திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 15 % பேர் இதுவரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1609 பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 1175 பேர் பயிற்சியை முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 186 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக திறன் மேம்பாட்டு கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 12, 2025
திருச்சி: 12 பேர் கைது – தனிப்படை அதிரடி

மணப்பாறை அடுத்த குமரபட்டி பகுதியில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக எஸ்பி செல்வ நாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டதில் பணம் வைத்து சீட்டு கட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பேரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


