News March 27, 2024

திருச்சி வேட்பு மனு தாக்கல் அறை மூடல்

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அதிமுக, அமமுக,மதிமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வேட்பாளர்கள் இன்று 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் இதற்கான நேரம் முடிந்த நிலையில் திருச்சிராப்பள்ளி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் அறை மூடப்பட்டது.

Similar News

News September 15, 2025

திருச்சி: கடன் தொல்லை நீக்கும் முருகன்

image

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

திருச்சி: கார்கள் நேருக்கு நேர் மோதல் – 6 பேர் படுகாயம்

image

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுகமணி பேரூராட்சி அலுவலகம் அருகே, இன்று காலை 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்து குளித்தலை மற்றும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது பேருந்துக்காக காத்திருந்த வசந்தா என்பவர் மீது கார் மோதியதில், அவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

News September 15, 2025

திருச்சி: மத்திய அரசு பணியாளர் தேர்வில் 511 பேர் ஆப்சென்ட்

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேசிய பாதுகாப்பு சேவை தேர்வு, திருச்சியில் இரண்டு மையங்களில் நேற்று (செப்.14) நடைபெற்றது. இத்தேர்வு எழுத இரண்டு மையங்களிலும் சேர்த்து 1274 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 763 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மீதி 511 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!