News August 18, 2024

திருச்சி விமான நிலைய முனையத்திலிருந்து மக்களுக்கு பஸ் வசதி

image

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் சார்பில் நாளை (ஆக.19) முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை நாளை காலை 8 மணி அளவில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். இதையொட்டி சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

Similar News

News October 16, 2025

திருச்சி: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் அக்.,18-ம் தேதி காலை 11 மணியளவில், மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எரிவாயு தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

திருச்சி: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி: Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க<<>>.
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 15, 2025

திருச்சி: தடுப்பு சுவரில் டூவீலர் மோதி பலி

image

திருச்சி மாவட்டம், பி.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (58). இவர் நேற்று துறையூரில் உள்ள தனது மகன் பிரபுவை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார். அப்போது ஆத்தூர் ரவுண்டானா அருகே சென்றபோது, அவரது டூவீலர் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!