News August 17, 2024
திருச்சி ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

திருச்சி கே.கேநகரில் இன்று சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தலைமையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மத்திய மண்டல ஐஜி, டிஐஜி,கமிஷனர்,எஸ்.பி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திருச்சியில் அதிக குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில், ரவுடி பட்டியலை எடுத்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டது.
Similar News
News January 3, 2026
அமித்ஷா வருகை – திருச்சி மாநகரில் ட்ரோன்கள் பறக்க தடை

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை மற்றும் நாளை மறுதினம் (ஜன.4, 5) ஆகிய இரு தினம், திருச்சி மாநகர பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடியை மீறி ட்ரோன்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 3, 2026
திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 3, 2026
திருச்சி காவல்துறை அறிவிப்பு

குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிப்போம் எனவும், குழந்தை திருமணங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அல்லது திருச்சி மாவட்ட காவல் உதவி எண் 8939146100-ஐ அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


