News February 16, 2025
திருச்சி ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு

திருச்சி ரயில்வே டி ஆர் எம் நிர்வாக அலுவலகம் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயிலில் உறவினர்களை ஏற்றி விட வருகை தரும்போது பிளாட்பாரத்திற்குள் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் நபர் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது. டிக்கெட் இல்லாத பட்சத்தில் ரயில்வே சட்டப்படி ரூ.250 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
Similar News
News October 26, 2025
திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

தொட்டியம் அடுத்த சின்னபள்ளிபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் (39) என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 22-ம் தேதி அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
News October 26, 2025
திருச்சி அருகே டூவீலர் திருடிய 2 சிறுவர்கள் கைது

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவர் நேற்று (அக்.24) அவரது 50 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை சிந்தாமணி அருகே நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அவரது டூவீலரை 14 வயதுடைய சிறுவன் திருடி சென்றதை கண்டறிந்தார். மேலும், இதேபோல, விஜயலட்சுமி என்பவரின் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரையும் 14 வயதுடைய சிறுவன் திருடியதை கண்டறிந்தார். இதுகுறித்த புகாரில் கோட்டை போலீசார் 2 சிறுவர்களையும் கைது செய்தனர்.
News October 26, 2025
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 22ம் தேதி சிறுமியை கற்பழித்த வழக்கில் பாண்டியன் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


