News December 31, 2024
திருச்சி ரயில்களின் நேரம் மாற்றம்

திருச்சி கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் நாளை (01-01-2025) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி – ஈரோடு – திருச்சி ரயில்களானது காலை 7 மணிக்கு பதிலாக 7.20க்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.50க்கு வந்தடையும். திருவாரூர் – திருச்சி ரயிலானது காலை 7 மணிக்கு பதிலாக 6.55க்கு வந்தடையும். ஷேர் செய்யவும்
Similar News
News November 29, 2025
திருச்சி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.29) நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
BREAKING திருச்சி: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாக தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
News November 28, 2025
திருச்சி: வங்கி வேலை அறிவிப்பு

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20-28 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


