News June 25, 2024
திருச்சி முதல் பெங்களூர்.. வந்தே பாரத் சேவை!

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை ரயில்வேதுறைக்கு உள்ளது. தற்போது, மதுரையிலிருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
Similar News
News October 19, 2025
திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட பொருட்கள் ஒப்படைப்பு

திருச்சி மாவட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வாகனங்கள், மொபைல் போன்கள் திருடு தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில், போலீசார் தீவிர நடவடிக்கைகளின் அடிப்படையில் வாகனங்கள், திருடு போன 37 பவுன் தங்க நகைகள், மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு இன்று அந்தந்த உரிமையாளர்களிடம் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வழங்கினார்.
News October 18, 2025
திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 18, 2025
திருச்சி: அமெரிக்காவிற்கு பார்சல் சேவை தொடக்கம்

திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் அமெரிக்காவிற்கு பார்சல் மற்றும் தபால் அனுப்பும் வசதி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 12 தபால் நிலையங்களிலும் இந்த சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.