News June 25, 2024

திருச்சி முதல் பெங்களூர்.. வந்தே பாரத் சேவை!

image

திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை ரயில்வேதுறைக்கு உள்ளது. தற்போது, மதுரையிலிருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Similar News

News December 13, 2025

திருச்சி: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

image

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலக போக்குவரத்து வாகன ஆய்வாளர் மணிபாரதி நேற்று கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

News December 13, 2025

திருச்சி: அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.9 லட்சம்

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி உத்தரவின் பேரில், மாநகர காவல்துறையினரால் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 சக்கர வாகனங்கள்-25, 4 சக்கர வாகனங்கள் 4 என மொத்தம் 29 வாகனங்கள், போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.9,63,1164/-ஐ அரசு கணக்கில் காவல்துறை சார்பில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News December 13, 2025

திருச்சி: அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.9 லட்சம்

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி உத்தரவின் பேரில், மாநகர காவல்துறையினரால் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 சக்கர வாகனங்கள்-25, 4 சக்கர வாகனங்கள் 4 என மொத்தம் 29 வாகனங்கள், போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.9,63,1164/-ஐ அரசு கணக்கில் காவல்துறை சார்பில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!