News August 15, 2024
திருச்சி மாவட்ட எஸ்.பி. கடும் நடவடிக்கை

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை எஸ்.பி.யாக ஷ்யாமளா தேவி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, திருச்சியில் பொது வினியோக திட்ட பொருட்கள் மற்றும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மற்றும் கள்ளத்தனமாக பதுக்கி வைப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
Similar News
News October 21, 2025
திருச்சி: நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை செல்வதற்கு வசதியாக நெல்லையில் இருந்து திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை (அக்.22) இரவு 11:55 மணிக்கு நெல்லையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மணப்பாறை, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக சென்னை சென்றடையும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
JUST IN திருச்சி : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 21, 2025
திருச்சி: ஐஏஎஸ் அதிகாரி தந்தை வீட்டில் திருட்டு

தமிழக ஜவுளித்துறை இயக்குநரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி லலிதா. இவரது தந்தை ராஜேந்திரன் (70) திருச்சி, லாவண்யா கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் சில நாட்களுக்கு முன், தன் வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள மகள் லலிதா வீட்டுக்கு சென்றார். இதையறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.80,000 ரொக்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் தங்க நகைகள் திருடி சென்றனர்.