News December 4, 2024
திருச்சி மாவட்ட எஸ்பி முக்கிய தகவல்

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காவல் வாகனங்கள் வருகின்ற (10.12.2024) அன்று ஏலம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு ஏலம் எடுக்க தங்களது ஆதார் அட்டையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 5000/- மற்றும் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ளவேண்டுமென திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
திருச்சியில் 25 பேர் கைது – போலீஸ் அதிரடி!

திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, லாட்டரி விற்பனையை தடுக்க உத்தவிட்டார். அதனடிப்படையில், நேற்று முந்தினம், திருச்சி, டிவிஎஸ் டோல்கேட், தஞ்சைரோடு, ஸ்ரீரங்கம், நேருஜிநகர், உறையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேறுகொண்டு 25 பேரை கைது செய்தனர்.
News December 13, 2025
திருச்சி: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலக போக்குவரத்து வாகன ஆய்வாளர் மணிபாரதி நேற்று கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
News December 13, 2025
திருச்சி: அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.9 லட்சம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி உத்தரவின் பேரில், மாநகர காவல்துறையினரால் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 சக்கர வாகனங்கள்-25, 4 சக்கர வாகனங்கள் 4 என மொத்தம் 29 வாகனங்கள், போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ரூ.9,63,1164/-ஐ அரசு கணக்கில் காவல்துறை சார்பில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


