News August 4, 2024

திருச்சி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

திருச்சி மாவட்டம் மாவட்ட எஸ்பி வருண் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், 1.50 லட்சம் கன அடி நீர் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொட்டியம் புத்தூர், நத்தம் காடுவெட்டி, ஸ்ரீ ராம சமுத்திரம், சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.

Similar News

News December 20, 2025

திருச்சி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

கடந்த 2019ம் ஆண்டு மணப்பாறை ஆண்டவர் கோவில் பகுதியில் ஜெகதீஷ் பாண்டியன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டடார். இவ்வழக்கில் கைதான வேடசந்தூரைச் சேர்ந்த அரவிந்த்-க்கு ஆயுள் தண்டனையும், பேகம்பூரைச் சேர்ந்த முத்துவேல், திருச்சியைச் சேர்ந்த பாதுஷா, ஆனந்த், தேனியைச் சேர்ந்த மதன்குமார் உள்ளிட்டோருக்கு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

News December 20, 2025

திருச்சி: மரத்தில் இருந்து கீழே விழுந்தவர் சாவு

image

முசிறி எல்லையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்ராஜ் (39). தொழிலாளியான இவர் சடையப்ப நகரி; உள்ள ஓர் வீட்டில் கண்ணாடி மாட்டுவதற்காக சென்றுள்ளார். வேலை முடிந்ததும் அங்கிருந்த மாமரம் ஒன்றில், மணிகண்டன் மாங்காய் பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

திருச்சியில் 4 மையங்களில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி திருச்சியில் 4 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு வரும், விண்ணப்பதாரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நுழைவு சீட்டு, அடையாள அட்டை நகல், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்பி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!