News August 4, 2024
திருச்சி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

திருச்சி மாவட்டம் மாவட்ட எஸ்பி வருண் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், 1.50 லட்சம் கன அடி நீர் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொட்டியம் புத்தூர், நத்தம் காடுவெட்டி, ஸ்ரீ ராம சமுத்திரம், சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.
Similar News
News December 7, 2025
திருச்சி: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<
News December 7, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்0-4, கட்டணமில்லா மாதிரித்தேர்வு வரும் 8-ம் தேதி காலை 10:00 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முழு பாடப்பகுதிகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். இந்த தேர்வில், மதிப்பெண் குறைந்தவர்களுக்கு அதனை அதிகரிக்க அறிவுரைகள், வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நூலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
திருச்சி: ரூ.18 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில் நிலையத்தில் சோதனை நடத்தினர். அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த ஹவுராவில் இருந்து வந்த ரயிலில் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த 4 பைகளில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 36 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போதைப்பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


