News August 4, 2024

திருச்சி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

image

திருச்சி மாவட்டம் மாவட்ட எஸ்பி வருண் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், 1.50 லட்சம் கன அடி நீர் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொட்டியம் புத்தூர், நத்தம் காடுவெட்டி, ஸ்ரீ ராம சமுத்திரம், சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.

Similar News

News September 19, 2025

தொட்டியத்தில் ஆட்டோ மீது பைக் மோதி விபத்து

image

தொட்டியம், பண்ணைவீடு பகுதியில் நேற்று மாலை 3 சக்கர ஆட்டோ இளநீா் ஏற்றிக்கொண்டு திரும்பிய போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி பைக்கில் சென்றவர் ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த 2 பேர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் விசாரணை

News September 19, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட 1999 மனுக்கள்

image

திருச்சியில் இன்று 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாம்களில் பொதுமக்களிடமிருந்து 1999 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் கைலாசபுரத்தில் 196, மணிகண்டத்தில் 180, கல்லக்குடியில் 361, அதவத்தூரில் 186, லால்குடியில் 480, நடுப்பட்டியில் 464, தா.பேட்டையில் 334, எரகுடியில் 458 மனுக்களும் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News September 19, 2025

திருச்சி: ரயில் நிலையத்தில் திடீர் சோதனை

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் இணைந்து, மோப்பநாய் உதவியுடன் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ரயில் நிலைய நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.

error: Content is protected !!