News April 23, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட திட்ட அலகில் முன்னேற்றத்தை நாடும் வட்டார திட்டத்தின் கீழ், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான ஒரு காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.55,000 வழங்கப்படும். விண்ணப்பங்களை மே.15-ம் தேதிக்குள் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டுமென திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT

Similar News

News November 28, 2025

திருச்சியில் தலைதூக்கிய புதிய மோசடி

image

திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மற்றும் பான்கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக ரூ.9 கோடி கட்ட வேண்டும் எனவும், அந்த தொகையை கலைவாணி தான் கட்ட வேண்டுமென, அவர் கணக்கு வைத்துள்ள வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கலைவாணி திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

News November 28, 2025

திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓயாமரி வழியாக மார்க்கெட் செல்லும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஓடத்துறை மேம்பாலம் வழியாக சிந்தாமணி பஜார், சங்கரன்பிள்ளை சாலை வழியாக செல்லலாம். இபி ரோடு வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பழைய பால்பண்ணை, மார்க்கெட் வழியாக செல்லலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழக அரசின் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள் வரும் டிச.2, 3 ஆகிய தேதிகளில் நேரடியாக வீடுகளுக்கு வந்து வழங்கப்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதிகளில் வீடுகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!