News September 15, 2024
திருச்சி மாவட்டம் ‘ஹாட்ரிக்’ சாதனை

திருச்சி மாவட்டம் கொடிநாள் நிதி வசூலிப்பதில் மாநில அளவில் தொடர்ந்து 3ஆம் முறையாக 3வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் கொடிநாள் நிதி வசூலுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் அளித்துள்ளார். மேலும் ஆட்சியர் பிரதீப் குமார் பொறுப்பேற்ற ஆண்டில் மட்டும் ரூ.2.65 கோடி வசூல் செய்ததற்கு ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News December 18, 2025
திருச்சி: 10th போதும்.. மத்திய அரசு வேலை

திருச்சி மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28,OBC–26)
5. கடைசி தேதி : 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை SHARE செய்து மற்றவர்களுக்கும் உதவுங்க.
News December 18, 2025
திருச்சி: எஸ்.பியின் அதிரடி நடவடிக்கை

முசிறி பகுதியில் சரவணன் என்பவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அதேபோல, லால்குடியில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக விக்னேஸ்வரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த இருவர்களின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதமாக இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க நேற்று திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News December 18, 2025
ஶ்ரீரங்கம்: வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிவிப்பு

திருச்சி ஶ்ரீரங்கம் தபால் நிலையத்தில் வீடு தேடி வந்து பார்சல் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடு, உள்நாடுகளுக்கு பார்சல் அனுப்ப விரும்பும் ஶ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 0431-2436933 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், இருப்பிடத்திற்கு வந்து பார்சல்கள் சேகரித்து அனுப்பி வைக்கப்படும் என கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ஜோஸ்பின் தெரிவித்துள்ளார்.


