News September 15, 2024
திருச்சி மாவட்டம் ‘ஹாட்ரிக்’ சாதனை

திருச்சி மாவட்டம் கொடிநாள் நிதி வசூலிப்பதில் மாநில அளவில் தொடர்ந்து 3ஆம் முறையாக 3வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் கொடிநாள் நிதி வசூலுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் அளித்துள்ளார். மேலும் ஆட்சியர் பிரதீப் குமார் பொறுப்பேற்ற ஆண்டில் மட்டும் ரூ.2.65 கோடி வசூல் செய்ததற்கு ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.
Similar News
News December 22, 2025
திருச்சி: அதிர்ச்சி விவரங்கள் வெளியீடு!

திருச்சி மாவட்டத்தில் SIR-இல் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:
1. திருச்சி மேற்கு – 57,339 பேர்
2. திருச்சி கிழக்கு – 57,819 பேர்
3. மணப்பாறை – 31,635 பேர்
4. ஸ்ரீரங்கம் – 44,148 பேர்
5. திருவெறும்பூர் – 39,983 பேர்
6. லால்குடி – 19,312 பேர்
7. மண்ணச்சநல்லூர் – 33,672 பேர்
8. முசிறி – 21,647 பேர்
9. துறையூர் – 26,238 பேர்
News December 22, 2025
திருச்சி: கடைக்கு அழைத்து செல்லாததால் தற்கொலை

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர்கள் புஷ்பராஜ் – டான் போரன் (25) தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு அழைத்து செல்லுமாறு டான் போரன் கேட்டுள்ளார். அதற்கு புஷ்பராஜ் மறுத்துவிட்டு கிரிக்கெட் விளையாட சென்றதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த டான் போரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News December 22, 2025
திருச்சி: பி.ஆர்.பாண்டியன் இன்று விடுதலை

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியனுக்கு ஓஎன்ஜிசி வழக்கில் வழங்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனையை, சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கிய நிலையில், திருச்சி மத்திய சிறையில் இருந்து பி.ஆர் பாண்டியன் இன்று நண்பகல் விடுவிக்கப்படுகிறார். பின்னர் காமராஜர் சிலைக்கும் அதனை தொடர்ந்து, தஞ்சசை மனுநீதி சோழன் சிலைக்கும் மரியாதை செலுத்த உள்ளார்.


