News March 26, 2025
திருச்சி மாவட்டம் பற்றிய முக்கிய தகவல்கள்…

தமிழகத்தின் 4-ஆவது பெரிய நகரமாக விளங்கும் திருச்சியை தலைமையகமாக கொண்ட திருச்சிராப்பள்ளி மாவட்டம் வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், தொழில் என பல்வேறு வகைகளில் தமிழகத்தின் மிக முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. சுமார் 31 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருச்சி மாவட்டத்தில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 85 சதவீதமாக உள்ளது. SHARE NOW!
Similar News
News November 28, 2025
திருச்சி: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம்- 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் – 1077 ஐ அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
திருச்சியில் தலைதூக்கிய புதிய மோசடி

திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மற்றும் பான்கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அந்நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக ரூ.9 கோடி கட்ட வேண்டும் எனவும், அந்த தொகையை கலைவாணி தான் கட்ட வேண்டுமென, அவர் கணக்கு வைத்துள்ள வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த கலைவாணி திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News November 28, 2025
திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருச்சி டவுன் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓயாமரி வழியாக மார்க்கெட் செல்லும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஓடத்துறை மேம்பாலம் வழியாக சிந்தாமணி பஜார், சங்கரன்பிள்ளை சாலை வழியாக செல்லலாம். இபி ரோடு வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பழைய பால்பண்ணை, மார்க்கெட் வழியாக செல்லலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


