News February 18, 2025
திருச்சி புதிய டைடல் பூங்கா அடிக்கல் நாட்டு விழா

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
Similar News
News December 21, 2025
திருச்சி: கிரைண்டர் வாங்க ரூ.5,000 !

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியம் வழங்கப்படும். 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE !
News December 21, 2025
மக்கள் நடமாட தடை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், ஜன.5 முதல் 7 ஆம் தேதி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 21, 2025
திருச்சி: ஓடும் பஸ்சில் கண்டக்டர் திடீர் சாவு

திண்டுக்கல் மாவட்டம் சாமியார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (45). அரசு பஸ் நடத்துனரான இவர் நேற்று திருச்சி வந்த பஸ்சில் பணியில் இருந்துள்ளார். அப்போது பஸ் தீரன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது சிவக்குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதைக்கண்ட பயணிகள் அவரது உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


