News February 18, 2025

திருச்சி புதிய டைடல் பூங்கா அடிக்கல் நாட்டு விழா

image

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 403 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் ஆறு தளங்களுடன் புதிய டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

Similar News

News October 23, 2025

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்த அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.24) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மணப்பாறை 11, 23 ஆகிய வார்டுகளிலும், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை பகுதியிலும், மணிகண்டம் கோனார் சத்திரம் பகுதியிலும், முசிறி ஏவூர் பகுதியிலும், மணப்பாறை ஆலகவுண்டம்பட்டி பகுதியிலும், மருங்காபுரி ஊனையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

திருச்சி: வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி திருமழபாடி சாலையில் சேகர் என்பவர் வீட்டின் மேல் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட சேகர் புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பாம்பை உயிருடன் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

News October 23, 2025

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!