News February 18, 2025

திருச்சி: பள்ளியை மூடக்கோரி வழக்கு – ரூ.1.50 லட்சம் அபராதம்

image

திருச்சியை சேர்ந்த அரவிந்த் என்பவர் திருச்சி மேல அம்பிகாபுரத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே இயங்கும் பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளியை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளதால் மனுதாரருக்கு ரூபாய் 1.50 லட்சம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

Similar News

News December 2, 2025

திருச்சி: அதிரடி காட்டிய போலீசார்

image

போலியான இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி கே.கே நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் ரூ.48 லட்சம் ஏமாற்றியது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஏமாற்றிய நபரிடம் இருந்து பணத்தை மீட்டு, மாநகர காவல் ஆணையர் காமினி பாதிக்கப்பட்டவரிடம் மீண்டும் பணத்தை ஒப்படைத்தார்.

News December 2, 2025

திருச்சி: 1368 கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம்

image

திருச்சி மாநகராட்சியில் ஜனவரி 2023 முதல் தற்போது வரை சாலையில் சுற்றித் திரிந்த 1,368 மாடுகளை பிடித்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உரிமை கோராத 68 கால்நடைகள் பொதுஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

News December 2, 2025

திருச்சி: 1368 கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம்

image

திருச்சி மாநகராட்சியில் ஜனவரி 2023 முதல் தற்போது வரை சாலையில் சுற்றித் திரிந்த 1,368 மாடுகளை பிடித்து கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உரிமை கோராத 68 கால்நடைகள் பொதுஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்திற்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!