News April 23, 2025
திருச்சி: நவீன எரிவாயு தகன மையம் மூடல்

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் 4-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் இயங்கி வரும் நவீன எரிவாயு தகன மையம் நாளை (24.04.24) முதல் மே.3-ம் தேதி வரை 10 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது. தகன மேடைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக 10 நாட்களுக்கு உடல்களை எரியூட்ட இயலாது என மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 13, 2025
திருச்சி: ஆதார் அட்டை திருத்தம் இனி ஈஸி!

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.மேலும் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 13, 2025
14 ஆண்டுகள் சிறை: திருச்சி நீதிமன்றம் அதிரடி

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் உள்ள தோப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வாய்பேச முடியாத 22 வயதுடைய மாற்றத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தஞ்சாவூரை சேர்ந்த வினோத் (40) என்பவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி சண்முகப்பிரியா நேற்று தீர்ப்பளித்தார்.
News November 13, 2025
திருச்சி: கணவன் – மனைவி தற்கொலை

திருச்சி மாவட்டம், தேவனூர் பகுதியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி – நல்லம்மாள் தம்பதியினர். சம்பவத்தன்று இருவரும் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டனர். தகவலின் பெயரில், சம்பவ இடத்திற்கு சென்ற தா.பேட்டை போலீசார் இருவரின் உடல்களையும் முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


