News March 29, 2024

திருச்சி : தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

image

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரி குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரோஜா மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 3 லட்சத்து 45ஆயிரம் இருந்தது. அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 6, 2025

திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

கோட்டைக்காரன்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மைதிலி. இவரது வீட்டில் தோட்ட வேலைக்கு வந்த கரூரைச் சேர்ந்த பாபு என்பவர், மைதிலி மற்றும் அவரது கணவர் சம்பத் ஆகியோரை கொடூரமாக தாக்கி வீட்டிலிருந்த தங்க நகை மற்றும் டூவீலரை திருடி சென்றுள்ளார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி பாபுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 6, 2025

திருச்சி: இன்று குடிநீர் வராது!

image

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் மின்பராமரிப்பு பணி இன்று (டிச.6) நடைபெற உள்ளது. இதனால் திருச்சி மத்திய சிறைச்சாலை, காஜாமலை, ரங்கா நகர், சுப்பிரமணியநகர், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, அம்மா மண்டபம், மேலூர், தேவிபள்ளி விறகுபேட்டை, சங்கிலியாண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

திருச்சி: மரம் முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

image

தொட்டியம், அரங்கூரில் நேற்று புளியமரம் விழுந்ததில் நிர்மலா என்பவர் உயிரிழந்தார். நிர்மலா மரத்தடியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில், சாப்பாடு வாங்குவதற்கு நடந்து செல்லும் போது புளியமரம் சாய்ந்து நிர்மலா மீது விழுந்தது. இதில், மயக்கமடைந்து கீழே விழுந்தவரை அவரது கணவர் மகாமுனி அரசு மருத்துவமனை கொண்டு சேர்த்தார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!