News April 22, 2025

திருச்சி – தாம்பரம் இடையே 5 நாள் கோடை கால சிறப்பு ரயில்

image

திருச்சி – தாம்பரம் இடையே, கோடை கால சிறப்பு ரயில், தஞ்சாவூர் , பாபநாசம் , கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் வழியாக 29.04.2025 முதல் 29.06.2025 வரை செவ்வாய் , புதன் , வெள்ளி , சனி , ஞாயிறு என வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட உள்ளது. முன்னதாக, இந்த ரயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயங்கியது. விரைவில் முன் பதிவு தொடங்க உள்ளது.

Similar News

News November 13, 2025

திருச்சி: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை நேற்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ATM PIN மற்றும் UPI PIN நம்பர்களை பதிவு செய்யும்போது மற்றவர்கள் பார்க்காதவாறு பதிவு செய்யவும். OTP எண்களை ரகசியமாக வைத்திருப்பது பாதுகாப்பானது. மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம்

News November 13, 2025

திருச்சி: RKT பார்சல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள RKT ஸ்பீடு பார்சல் நிறுவனத்தில் காலியாக உள்ள ACCOUNTANT உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, ஆண் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.13,500 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்

News November 13, 2025

திருச்சி: மரத்தில் மோதி மூளை சாவு

image

சேலத்தைச் சேர்ந்த ராஜா (51). இவர் கடந்த நவ.2-ம் தேதி டூவீலரில் சோபனாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கொப்பம்பட்டி அருகே வந்தபோது சாலை ஓரத்தில் இருந்த தடுப்பின் மீது மோதி அவர் கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச் சாவு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். இது குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!