News April 20, 2025

திருச்சி: சுடுகாட்டில் அமைந்துள்ள காலபைரவர் கோவில்

image

திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஓயாமரி சுடுகாடு பகுதியில் காலபைரவருக்கென தனிக்கோவில் அமைந்துள்ளது. ஓயாமல் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டுவருவதால் ஓயாமரி சுடுகாடு என பெயர் பெற்ற இத்தளத்தில் அமைந்துள்ள காலபைரவரை அஷ்டமி தினத்தன்று எள் விளக்கு, எலுமிச்சை பழம், தேங்காய் மூடியில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் பழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE NOW!

Similar News

News December 20, 2025

திருச்சி: பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (டிச.20) மற்றும் நாளை (டிச.21) SIR பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாம்களை SIR பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு ‘1950’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 20, 2025

திருச்சி: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்களது வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு எளிதாக தெரிந்து கொள்ளலாம். SHARE NOW!

News December 20, 2025

மணப்பாறை: பொதுமக்கள் நடமாட தடை

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், ஜன.5 முதல் 7 ஆம் தேதி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!