News April 4, 2025
திருச்சி: கோவில் குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான ராமா் தீா்த்தக் குளத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குளத்தின் முள்புதரில் கற்சிலை ஒன்றின் தலைப்பகுதி மட்டும் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!
Similar News
News November 2, 2025
திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்தம் – உதவி எண்கள் அறிவிப்பு

திருச்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை 04332-260576, ஶ்ரீரங்கம் 0431-2230871, மேற்கு 0431-2410410, கிழக்கு 0431-2711602, திருவெறும்பூர் 0431-2415731, லால்குடி 0431-2541500, மண்ணச்சநல்லூர் 0431-2561791, முசிறி 0432-6260335, துறையூர் 0432-7222392 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
திருச்சி: கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<
News November 2, 2025
திருச்சி: கைதியின் சடலம் மறு உடற்கூறாய்வு

திருச்சி மத்திய சிறையில் கடந்த அக்.24-ம் தேதி உயிரிழந்த சுபின் குமார் என்பவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக, அவரது தாயார் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பேரில் சுபின் குமார் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் சுபின்குமார் உடல் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


