News March 18, 2024
திருச்சி கோர்ட் அதிரடி உத்தரவு.!

திருச்சியில் கடந்த 7.9.2020ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஜான் மேக்சிங் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், எதிரிக்கு 20 வருட சிறை தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி மகிலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவலர்களை திருச்சி கமிஷனர் பாராட்டி உள்ளார்.
Similar News
News September 16, 2025
திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான செப்டம்பர் மாத குறைதீர் கூட்டம் வரும் செப்.,19ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர் பாசனம், வேளாண்மை சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
திருச்சி: மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக மோசடி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக OTP, கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். செல்போனுக்கு வரும் சந்தேகத்திற்குரிய அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம். குறுஞ்செய்திகள் மூலமாகவோ, வாட்ஸ்ஆப் மூலமாக வரும் தெரியாத லிங்குகளை தொடவேண்டாம் என திருச்சி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 15, 2025
திருச்சி: கடன் தொல்லை நீக்கும் முருகன்

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.