News March 18, 2024

திருச்சி கோர்ட் அதிரடி உத்தரவு.!

image

திருச்சியில் கடந்த 7.9.2020ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஜான் மேக்சிங் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், எதிரிக்கு 20 வருட சிறை தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி மகிலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவலர்களை திருச்சி கமிஷனர் பாராட்டி உள்ளார்.

Similar News

News November 27, 2025

திருச்சி: 6 நாட்களுக்கு தடை விதிப்பு

image

வையம்பட்டி அடுத்த வீரமலைபாளையம் குண்டு சுடும் பயிற்சி தளத்தில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தலைமையிடமாக கொண்ட இந்தோ-திபெத் ராணுவ வீரர்கள் வரும் நவ.,27-ம் தேதி முதல் டிச.,2-ம் தேதி வரை குண்டு சுடும் பயிற்சி செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்றுள்ளனர். அதனடிப்படையில் வீரமலைபாளையம் பகுதியில் நாளை முதல் 6 நாட்களுக்கு பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2025

திருச்சி: லாரி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து

image

மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தி பகுதியில் நள்ளிரவில் ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 27, 2025

திருச்சி: தடுப்பு கட்டையில் மோதி சிதறிய கார்!

image

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த சரத்பாபு என்பவர் கேரளா மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக கல்லுப்பட்டி அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த மூவரும் பலத்த காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!