News April 18, 2025
திருச்சி: கார் மோதி விவசாயி பலி

வையம்பட்டியை அடுத்த சேசலூர் முத்தமடைப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சடையன் (50). இவர் நேற்று காலை தனது தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு, சேசலூர் அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சடையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
திருச்சி: கொட்டிக் கிடக்கும் அரசு வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 27.11.2025
4. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
5. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
திருச்சி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு!

திருச்சி மக்களே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் ‘9444123456’ என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 21, 2025
திருச்சி: இலவச ஆங்கில மொழி பயிற்சி

தாட்கோ மூலம் 12ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி ராஜா காலனி பகுதியில் உள்ள தாட்கோ அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431- 2463969 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


