News April 23, 2025

திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

image

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐ.ஐ.எம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 21, 2025

திருச்சி: இளம்பெண் குத்திக் கொலை; அதிரடி தீர்ப்பு

image

திருச்சி ரெட்டிமாங்குடி சேர்ந்த தெய்வமணி (35) என்பவரை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில், அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கைது செய்தனர். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் உறவினர் கண்ணன் என்பவர் தெய்வமணியை பீர்பாட்டிலால் குத்தி கொலைசெய்த வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.

News November 21, 2025

திருச்சி: எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்

image

திருச்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு உதவி மையங்கள் (முகாம்) செயல்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

திருச்சி: எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்

image

திருச்சியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு உதவி மையங்கள் (முகாம்) செயல்பட உள்ளது. இதனை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!