News April 23, 2025

திருச்சி: ஐ.ஐ.எம்-இல் நூலக பயிற்றுநர் பணி

image

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்) நூலக பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் தகவல் அறிவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்ற 28 வயது பூர்த்தியடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.23,000 வழங்கப்படும். www.iimtrichy.ac.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஐ.ஐ.எம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News October 26, 2025

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

image

முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 22ம் தேதி சிறுமியை கற்பழித்த வழக்கில் பாண்டியன் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News October 25, 2025

திருச்சி: B.E முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.E / B.Tech / B.Sc Engineering Degree
3. சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/-
4. வயது வரம்பு: 21-25
5. கடைசி தேதி : 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK HERE<<>>]
7.அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!

News October 25, 2025

திருச்சி: இரிடியம் விற்பதாக மோசடி- சிபிசிஐடி விசாரணை

image

திருச்சி, மருங்காபுரி அருகே உள்ள நெல்லிப்பட்டியைச் சேர்ந்த நல்லமுத்து, சியாமளா தம்பதியினர் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சிபிசிஐடி போலீசார் நேற்று அவர்களது வீட்டில் சோதனை செய்தனர். அதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக தம்பதியினரை சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!