News May 7, 2025
திருச்சி எஸ்.பி எச்சரிக்கை

திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரின் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுபோல பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
திருச்சி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர்வரத்தினை பொறுத்து திருச்சி முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை காலம் முடிவடையும் வரை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
திருச்சி: மழையால் பாதிப்பா? உடனே அழையுங்கள்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது, வீடுகள் சேதமடைவது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல்கள் தெரிவிக்கலாம்.
News October 21, 2025
திருச்சி: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து

சேலத்திலிருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி வந்த தனியார் பேருந்து வாத்தலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, தொடர் மழையின் காரணமாக வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 5-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.