News August 26, 2024
திருச்சி எஸ்பி அவதூறு வழக்கில் மேலும் இருவர் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே குறித்தும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சண்முகம், அப்துல் ரகுமான் ஆகிய இருவரை தில்லைநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News December 19, 2025
திருச்சி: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

திருச்சி மக்களே, தமிழக அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் 1,000 பேருக்கு ஆட்டோ வாங்க கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
திருச்சி: ஆடு மேய்த்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

லால்குடி அருகே கீழ மணக்கால் கிராமத்தை சேர்ந்தவர் மருதம்பாள் (78). இவர் சம்பவத்தன்று லால்குடி – அன்பில் சாலையில் கீழ மணக்கால் பஸ் நிறுத்தம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதவத்தூர் பகுதியை சேர்ந்த மதிவாணன் (39) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மருதம்பாள் மீது மோதியதில், பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த லால்குடி போலீசார் மணிவாணனை கைது செய்தனர்.
News December 19, 2025
திருச்சி: முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம், வஉசி சாலை, கலெக்டர் ஆபிஸ் சாலை, கண்டோன்மென்ட், வாலாஜா சாலை, மன்னார்புரம், பொன்மலைப்பட்டி, பெரிய சூரியூர், குண்டூர், வேங்கூர், முசிறி, தண்டலைபுதூர், மணமேடு, தும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது.


