News October 23, 2024
திருச்சி என்ஐடியில் மீண்டும் பரபரப்பு

திருச்சி என்ஐடி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் 4ஆம் ஆண்டு பி.டெக் படிக்கும் சென்னையைச் சேர்ந்த நித்தியசெல்வம் என்ற மாணவன் தொண்டை வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் வாய் கொப்பளிக்கும் மருந்தை குடித்ததால், அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவறுதலாக மருந்தை குடித்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News December 20, 2025
திருச்சி: பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (டிச.20) மற்றும் நாளை (டிச.21) SIR பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாம்களை SIR பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு ‘1950’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
திருச்சி: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
மணப்பாறை: பொதுமக்கள் நடமாட தடை

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைபாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், ஜன.5 முதல் 7 ஆம் தேதி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. ஆகவே மேற்குறிப்பிட்ட தேதிகளில் காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் பொதுமக்கள் நடமாடக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


