News January 2, 2025
திருச்சி: இரண்டு சார் பதிவாளர்கள் மாற்றம்

திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் சார் பதிவாளர்கள் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா காஞ்சிபுரம் நிர்வாக சார்பதிவாளராகவும், செங்கல்பட்டு 1 எண் இணை சார்பதிவாளர் அன்பழகன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சார்பதிவாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
திருச்சி: ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

திருச்சியில் அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம் வரும் அக்.10 ஆம் தேதி, ஆட்சியர் அலுவலகதில் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பிய நபர்கள் மட்டும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
திருச்சி: திட்ட முகாமில் 1556 மனுக்கள் பதிவு

திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (செப்.12) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பெருவளநல்லூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் அதிகபட்சமாக 480 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் மணிகண்டம் ஒன்றியத்தில் 180, துறையூர் ஒன்றியத்தில் 213, திருவெறும்பூர் ஒன்றியத்தில் 257 மனுக்கள் என மொத்தம் 1556 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
திருச்சி: ஊர்க்காவல் படையில் சேர அழைப்பு

திருச்சி ஊர்க்காவல் படை அமைப்பில் 53 ஆண் ஊர்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் என மொத்தம் 57 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோர் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து செப்.,22-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். SHARE பண்ணுங்க.