News June 27, 2024
திருச்சி: ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் “இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்” பணியாற்றும் தன்னார்வலர்கள் மனு அளித்தனர். அதில், “இல்லம் தேடி கல்வித் திட்டத்தை” நிறுத்தக்கூடாது. அதனை தொடர்ந்து மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சுமார் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மனு அளித்தனர்.
Similar News
News January 2, 2026
திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருச்சி பீமநகர் கொச தெருவை சேர்ந்தவர் சைமன் கிஷோர் (23). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி செம்மொழி ரயிலில் சென்று கொண்டிருந்த அஞ்சலி (31) என்ற பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சைமன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News January 1, 2026
திருச்சி: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

திருச்சியில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. பஞ்சப்பூர் பேருந்து முனையம் திறப்பு
2. முசிறி வருவாய் கோட்டாட்சியர் அரமுத தேவசேனா விபத்தில் பலி
3. தவெக தலைவர் விஜய் பரப்புரை
4. சிறுகனூர் அருகே இளம்பெண் எரித்து கொலை
5. புத்தூர் பகுதியில் சிவாஜி சிலை திறப்பு
6. திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் வெட்டிக்கொலை
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க.
News January 1, 2026
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


